உலகின் மிகப் பெரிய மின்சார உல்லாசப் பிரயாண கப்பலான Yangtze River Three Gorges 1 தன்னுடைய வெள்ளோட்டத்தை சீனாவின் யாங்சி ஆற்றில் முடித்தது. சுமார் 1300 பேர் பயணம் செய்யக் கூடிய கப்பல் இதுவாகும்.
ஹங்கேரியின் பிரதமராக விக்டர் ஓபன் (Viktor Orban) 4 ஆவது தடவையாக பதவியேற்றார். நடைபெற்று முடிந்த தேர்தலில் இவருடைய கட்சி 53.1 சதவீத வாக்குகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
2022 ஆம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர் பட்டியலை அண்மையில் Forbes சஞ்சிகை வெளியிட்டது. அதில் Tesla மற்றும் SpaceX நிறுவனங்களின் Elon Musk முதலாவது இடத்திலுள்ளார்.
சேர்பியாவின் அலக்ஸாண்டர் வுயி (Aleksandar Vui) அந்நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் 58 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். ஆனால் பாராளுவமன்றத் தேர்தலில் அவருடைய கட்சி 42 சதவீதமான வாக்குளையே பெற முடிந்தது.
பாக்கிஸ்தானின் 23 ஆவது ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்பட்டார். அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுவமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாக்கிஸ்தான் பாராளுவமன்றத்தில் 342 வாக்குகளில் 174 வாக்குகளை ஷெபாஸ் ஷெரீப் பெற்றே பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.
செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
pothu arivu in Tamil, pothu arivu in Tamil Sri Lanka, pothu arivu 2022, Current Affairs Tamil, பொது அறிவு, நடைமுறை நிகழ்வுகள், போட்டிப் பரீட்சை வழிகாட்டி, pothu arivu ulagam 2022
![]() |