பங்களாதேஷில் ஆறு மாடிகளைக் கொண்ட தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீயினால் 54 பேர் மரணமடைந்துள்ளனர்.
தொழிற்சாலையிலிருந்த இரசாயனப் பதார்த்தங்கள் மற்றும் பொலித்தீன் போன்றவை இந்த தீ விரைவாகப் பரவியமைக்கான காரணங்களாகும்.
கட்டடத்திலிருந்து கீழே பாய்ந்ததன் மூலமாக மூவர் இறந்துள்ளனர். கட்டடத்திலிருந்தவர்களுள் 25பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். குறைந்தது 50 பேரளவில் காயத்திற்குள்ளாகியுள்ளனர். வியாழன் மாலை ஏற்பட்ட தீ வெள்ளி மாiலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
Source : CNN