மே 2018 உலக நிகழ்வுகள்


இலங்கை நிகழ்வுகள்

* 8 ஆவது பாராளுவ மன்றத்தின் 2ஆவது அமர்வு ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

*.  பஸ் கட்டணங்களை 6.5% இனால் அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியது. எனினும் பேச்சுவார்த்தைகளின் பின் 12.5% ஆக அதிகரிக்கப்பட்டது.

* . மூவரடங்கிய புதிய மேல் நீதிமன்றத்தை உருவாக்கும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

* . இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக 24 பேர் மரணமடைந்தனர் -

உலக நிகழ்வுகள்

* லெபனான் பாராளுவமன்றத் தேர்தலில் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு வெற்றி பெற்றது.

* . வட கொரியத் தலைவர் கிம் . யொங், உன் சீனாவுக்கு விஜயம் செய்தார்.

* . ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்தது.

* . மலேசியாவின் 14 ஆவது பாராளுவமன் றத் தேர்தலில் முன்னாள் பிரதமர் மஹ தீர் முஹம்மட் வெற்றி பெற்றார். 115_ இடங்களில் இவரது கூட்டணி வெற்றி பெற்றது . 223 ஆசனங்களைக் கொண்ட மலேசிய பாரTளுவ மன்றத்தில் ஆட்சியமைக்க 112 ஆசனங்கள் தேவை.

* . பார்ப்படோஸ் நாட்டின் முதல் பெண் பிரதமராக மியா மொத்லியே தெரிவானார்.

* . வடகொரிய தூதுவர் கிம் யாங் சால்  அமெரிக்காவுக்கு விஜயம் செய்தார் -

விளையாட்டு

* . மூன்றாவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றன. இதில் இந்தியா சம்பியனாகியது. இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.12 தங்கம் 10 வெள்ளி 19 வெண்கலப்பதக்கங்களை இலங்கை பெற்றுக் கொண்டது.


* .சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ .பி .எல் கிண்ணத்தை மூன்றாவது முறையாக கைப்பற்றியது.

* . அனைத்து வித போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக ABD வில்லியர்ஸ் அறிவித்தார்.

* . இலங்கையைச் சேர்ந்3 ஜொஹான் பீரிஸ் எவரஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார். எவரெஸ்ட்டில் ஏறிய இலங்கையர் வரிசையில் இவர் இரண்டாவது நபராவார். 2016 இல் ஜெயந்தி உதும் பொல எவரெஸ்ட்டில் ஏறிய முதல் இலங்கையர் என்ற சாதனையைப் படைத்தார்.

facebook.com/ulahavalam
ulahavalam.blogspot.com








கருத்துரையிடுக

புதியது பழையவை